


நமது பள்ளியின் 110வது ஆண்டு விழாவானது 26-10-௨௦௧௦ வெள்ளிக் கிழமையன்று நடைபெற்றது. இவ்விழாவில் தலைமையுரையை பள்ளியின் தாளாளர் திரு J.R. இராமமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார். ஆண்டறிக்கை தலைமையாசிரியர் திரு. கே. இராஜேந்திரன் அவர்கள் வாசித்தார். ஆண்டு மலரினை திரு J.R. இராமமூர்த்தி அவர்கள் வெளியிட அதனை பட்டதாரி உதவித்தலைமையாசிரியர் திரு.ஆர். இராமநாதன், இடைநிலை உதவித்தலைமையாசிரியர் திரு. சி. சரவணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சிறப்பு விருந்தினர் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் டாக்டர் திரு. பி. சங்கரராமன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தி ஆண்டுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டுத்துறையில் சாதனைகளை புரிந்த மாணவ, மாணவிகளுக்கும், ஆண்டு விழா போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். விழாவிற்கு ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் திரு. கே.வி. நடராஜன் ஐயா அவர்களும், Er. திரு. கோபாலன் அவர்களும் வந்திருந்து விழாவினை சிறப்பித்தனர்.
விழாவில் பல்வேறு பத்திரிகை அன்பர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் வந்திருந்தனர். இறுதியில் முதுகலை உதவித்தலைமையாசிரியர் திரு. கே. பத்மனாபன் அவர்கள் நன்றியுரை நவில நாட்டுப்பண்னுடன் விழா இனிதே நிறைவுற்றது. இங்கு விழாவின் சில புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
நன்றி.
பள்ளிக்காக
கே.கண்ணன்,
கணிப்பொறி ஆசிரியர்
DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி,
மயிலாடுதுறை.
